தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியானஅஜித்தின் 48-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

நடிப்பு மட்டுமின்றி, கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், குட்டி விமானங்களை வடிவமைத்தல் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளார்.

தனது பட விழாக்களிலேயே கலந்துக் கொள்வதை தவிர்க்கும் அஜித் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் நிராகரித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுடன் நட்பு பாராட்டி வந்தவர் தான் அஜித் என்பது ஆச்சர்யமான தகவல்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் பிறந்தநாளுக்காக வினோத் என்ற நிருபர், முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார். இதில், அஜித்தின் இளமை காலத்தின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது போல நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை பார்த்து வியந்த அஜித், உடனே நிருபர் வினோத்துக்கு போன் செய்து, தனது இளமை காலத்தில் பழகியவர்கள் சிலரை தன்னால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை, அப்படிப்பட்டவர்களை எப்படியோ கண்டுபிடித்து, இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரித்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.