சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர்  அஜோய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான டாக்டர் அஜோய் குமார்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  புயல் மற்றும் வெள்ளத்தால் தமிழகம் தவித்து வருகிறது, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தாராளமாக பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் முகாமிட வேண்டும்.

தமிழக அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறோம், உங்கள் உதவியால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

‘ஜூடேக பாரத், ஜீதேகா இந்தியா’

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.