சென்னை: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமாகி விடும் என்று அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த அதிமக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளையும் இழந்துள்ளதுடன் 90 சதவிகிம் தோல்வியை சந்தித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமாகி விடும் என்று கூறினார். அதிமுகவில் சரியான தலைமை இல்லாததே, தேர்தலில் டெபாசிட் இழக்க காரணம் என்று கூறியதுடன், இரட்டை தலைமையையும் கடுமையாக விமர்சித்தார்.