சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்க கழக மண்டலங்கள் மற்றும்பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு ஆகஸ்டு 14ந்தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஆகஸ்டு  14ந்தேதியும், 2வது கட்ட தேர்தல் ஆகஸ்டு 22ந்தேதியும், 3வது கட்ட தேர்தல் ஆகஸ்டு 29ந்தேதியும், 4வது கட்ட தேர்தல் செப்டம்பர் 7ந்தேதியும், 5வது கட்ட தேர்தல் செப்டம்பர் 17ந்தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.