சென்னை: 
சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் வெற்றிவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை அறிந்த அதிமுக ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு திரளத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணி விவகாரத்தில் அதிமுக பிரமுகர் வெற்றிவேலுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.