சென்னை: 
ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi எனத் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குபவர். இவர் இதுவரை ’@OfficeOfRG’ என்ற பெயரிலான தனது டிவிட்டர் கணக்கில் செயல்பட்டு வந்தார். இதில் தனது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும்,காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டன.  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,  கடந்த 14-ஆம் தேதி,  காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் அனைத்தும் அன்-லாக் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi என மாற்றியுள்ளார்.