ntlrg_161031123806000000

நடிகர் விஜய் “தெறி” படம் முடிந்து வெளியான உடனே அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் பைரவா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட இந்த படம் 90 நாட்கள் படமாக்கப் பட்டுள்ளது. இறுதியாக ஒரு பாடல் மட்டும் பாக்கியிருந்த நிலையில் அதை படமாக்குவதற்கு சுவிட்சர்லாந்து பறந்து சென்றது படக்குழு.

அங்கு 1 வாரம் தங்கி விஜய்யும் கீர்த்தியும் அந்த பாடலை படமாக்கிய பின்னர் இப்போது விஜய் மீண்டும் இந்தியா வந்துள்ளார். அவர் சுவிட்சர்லாந்திலிருந்து துபாய் வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார். இவரை யாரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காக நோயாளிகள் பயன்படுத்தும் ப்ரீத்திங் மாஸ்கை அணிந்து கொண்டு வந்துள்ளார். அதையும் மீறி விஜய்யை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அதனை செல்போனில் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்