விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்டவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அது வேதனையாக இருந்தது என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பூந்தோட்ட காவல்காரன், உழவன் மகன், நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் விஜயகாந்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ராதிகா. விஜயகாந்த் – ராதிகா ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜயகாந்த் மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் “விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..

திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! !! தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!!

சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் …!!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!!

அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!! விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது…!! அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!!

இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்…!!

ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்…!! அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் !! you have done your best Viji, RIP” என்று பதிவிட்டுள்ளார்.