சென்னை

டிகர் பால சரவணன் தனது தங்கையின் கணவர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தொற்றால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இந்தியாவில் இதுவரை சுமார் 2.15 கோடி பேர் பாதிக்கப்பட்டு 2.34 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்றுவரை 1.76 கோடி பேர் குணம் அடைந்து 36.44 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.   இந்த அலையில் மரண எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

பல திரையுலக பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உயிர் இழந்து வருகின்றனர்.  இயக்குநர் கே வி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டவர்கள் மிகச் சமீபத்தில் கொரோனாவால் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  அவ்வகையில் நடிகர் பால சரவணனின் தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் உயிர் இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பால சரவணன் தனது டிவிட்டரில், ”அன்பு நண்பர்களே,  இன்று எனது தங்கையின் கணவர் கொரோனாவால் இறந்து விட்டார்.  32 வயது.  தயவு கூர்ந்து கவனமாக இருக்கவும்.  நமக்கெல்லாம் வராது என நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும் முகக் கவசம் அணிவீர்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.