Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

89.50 அடியாக உயர்வு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு…

Sep 3, 2020
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 6,522 கனஅடியில் இருந்து 17,937 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
கடந்த மாதம் தொடக்கத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் அளவை அதிகரித்த நிலையில், இடையில், குறைத்து வந்தது. இதற்கிடையில்,  மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம்  டெல்டா பாசனத்துக்காகதண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில், 100அடி வரை எட்டிய தண்ணீர் படிப்படியாக குறையத் தொடங்கியது.  வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், தற்போது, வினாடிக்கு  9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.  கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதேவேளையில்,  மேட்டூர் அணைக்கு கடந்த இரு வாரமாக குறைந்த அளவிலேயே நீர் வந்து கொண்டிருந்தது.  சுமார் 6500 கன அளவிலான நீர் வந்துகொண்டிருந்தது. ஆனால், நேற்று மாலை முதல் மீண்டும்  நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு  17,937 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும், நீர்இருப்பு 52.08 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

Post navigation

காங்கேயத்தில் கனமழை: மின்னல் தாக்கி 15 ஆடுகள் பலியான பரிதாபம்
பொருளாளர் பதவிக்கு டிஆர்.பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer