தஞ்சை:

தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதியதில் 8 பேர் பலியாயினர்.

திருச்சி- தஞ்சை சாலையில் வல்லம் பகுதியில் இன்று மாலை அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ் டிரைவர், மினி லாரி டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அரசு பேருந்தில் 60 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.