தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 383, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 49 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 42, கன்னியாகுமரி 18, திருநெல்வேலி 8, நீலகிரி, சிவகங்கை, திருச்சி மற்றும் விருதுநகரில் தலா 7 பேருக்கும், மதுரை, சேலம் மற்றும் தூத்துக்குடியில் தலா 6 பேருக்கும்

திருப்பூர் 5, ஈரோடு மற்றும் திருவண்ணாமலையில் தலா 4 பேருக்கும் ராணிப்பேட்டையில் 3,

தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் வேலூரில் 2 பேருக்கும்

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 16,701 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 397 ஆண்கள் 340 பெண்கள் என மொத்தம் 737 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

322 பேர் இன்று குணமடைந்த நிலையில் 4366 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.