சென்னை,

69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சி கொடி கம்பத்தில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த எழுச்சிமிகு விழாவில் அவருடன்   தமிழக முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ்  உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்  கலந்துகொள்கின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரை ஐஜி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் இன்று காலை சரியாக  8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அவரை முதல்வர், துணைமுதல்வர், சபாநாயகர் உள்பட முப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஆளுநர் ஏற்றினார். அதைத்தொடர்ந்து நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.