தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 306, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 48 மற்றும் காஞ்சிபுரத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கன்னியாகுமரி 32, கோவை 22, திருநெல்வேலியில் 16, ராணிப்பேட்டை 11, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சியில் தலா 10 பேருக்கும்

வேலூரில் 8, சேலம் 7, கடலூர் 6, திருவண்ணாமலை 5, சிவகங்கையில் 4 பேருக்கும்

நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும்

தருமபுரி, ஈரோடு,கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும்

அரியலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, அமெரிக்காவில் இருந்து வந்த 4 பேருக்கும், ஆஸ்திரேலியா, ஸ்விட்ஸ்ர்லாந்து மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 19,415 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 367 ஆண்கள் 325 பெண்கள் என மொத்தம் 692 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

243 பேர் இன்று குணமடைந்த நிலையில் 3522 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.