தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 295, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 27 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 31, கன்னியாகுமரியில் 21, திருச்சி 11 பேருக்கும்

மதுரை, ராணிப்பேட்டை மற்றும் சேலத்தில் தலா 7 பேருக்கும் ஈரோட்டில் 6, சிவகங்கை மற்றும் திருவண்ணாமலையில் 5 பேருக்கும் தூத்துக்குடியில் 4 பேருக்கும்

நாமக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும்

தென்காசி, திருவாரூர் மற்றும் வேலூரில் தலா 2 பேருக்கும்

தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர ஜப்பானில் இருந்து வந்த 3 பேருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 15,881 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 334 ஆண்கள் 262 பெண்கள் என மொத்தம் 596 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

217 பேர் இன்று குணமடைந்த நிலையில் 3073 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.