தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 286, செங்கல்பட்டில் 119, திருவள்ளூரில் 35 மற்றும் காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 39, கன்னியாகுமரியில் 20, திருநெல்வேலியில் 9, திருச்சி 8, ஈரோடு 7, ராணிப்பேட்டை 6, தூத்துக்குடி 5, சேலத்தில் 4 பேருக்கும்

மதுரை, நாமக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் திருப்பூரில் தலா 3 பேருக்கும்

மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் விருதுநகரில் தலா 2 பேருக்கும்

கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை,தென்காசி, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 15,742 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 298 ஆண்கள் 291 பெண்கள் என மொத்தம் 589 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

208 பேர் இன்று குணமடைந்த நிலையில் 2694 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.