நாகை,

லங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்துகொண்டே வருகிறது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் மீண்டும் கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து பல முறை முறையீட்டும், இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் சென்ற படகும் சிறைபிடிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.