சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான செய்தியில் 80சதவிகித மாணவர்கள் தேர்வு பெறவில்லை, 20 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது 35 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுஙளளனங அரசு பள்ளி மாணவர்கள் 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் (100%) பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இதில், குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரையில் நீட் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்கி பெற்றுள்ளனர் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]இந்த ஆண்டு நீட் தேர்ச்சி குறைவு: தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்….