சென்னை; நீட் தேர்வில் இந்த ஆண்டு  தேர்ச்சி மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 702 மதிப்பெண் பெற்று ஹரினி 2வது இடம் பிடித்துள்ளார்.  முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

நடப்பாண்டு நாடு முழுவதும் 17.64 லட்சம்  பேர் நீட் தேர்வு எழுதினார். இதில்,  9.93 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். என்டிஏ வெளியிட்ட அறிக்கையின் படி, நீட் தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வில் 429160 ஆண்கள், 563902 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 993069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில்,  உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 1.17 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1.13 லட்சம் பேரும்,  ராஜஸ்தானில் 82,54 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி  விகிதம் 6% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 57.43% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில், 1,42,894 தமிழக மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.  ஆனால் 1,32,167 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

தேர்வு எழுதிய 1,32,167 பேரில், தமிழ் வழியில் 31,965 மாணவர்கள் தேர்வெழுதினர். மொத்ததில், 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 99,610 பேர் தேர்வெழுதி அதில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாததால், தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய 17,000 அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வி அடைந்துள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல் கூறப்படுகிறது.

நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வியடைந்த நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் கடும் சரிவை கண்டுள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த நிலையில், 2022-ல் 51.30% ஆக தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில், 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதியதில், 67,787 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை முறையாக தமிழகஅரசு மேற்கொள்ளாததும், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறிய நிலையில், அதை முடியாத நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்ள கூறியதாலும்,  தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.