சென்னை: 
ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் மொத்த விவரங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பக பதிவு தாரர்களின் மொத்த விபரங்கள் 31.07.2021 தேதியின்படி அறிவிக்கப்பட்டுள்ளன.
இது 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 13,25,333 பேர் பதிவு செய்துள்ளனர். 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17,88,012 பேர் பதிவு செய்துள்ளனர். 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசுப் பணி வேண்டிக் காத்திருப்போர் 26,27,948 பேர் பதிவு செய்துள்ளனர். 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 12,77,839 பேர் பதிவுசெய்துள்ளனர். மற்றும் 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11,213 பேர் பதிவு செய்துள்ளனர் மொத்தமாக 70,30,345 பேர் பதிவு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு தாரர்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் கை கால் குறைபாடுடையோர் ஆண்கள் 70 ஆயிரத்து 032 பேரும், பெண்கள் 36 ஆயிரத்து 553 பேரும் பதிவு செய்துள்ளனர். மேலும் விழிப்புலன்  இழந்தோரில், ஆண்கள் 11 ஆயிரத்து 458 பேரும், பெண்கள் 5176 பேரும் பதிவு செய்துள்ளனர் மற்றும் காது கேளாதோர், வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 417 பேரும் பெண்கள் 4441 பேரும் பதிவு செய்துள்ளனர் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக ஆண்கள் 9 ஆயிரத்து 417 பேரும் பெண்கள் 4 ஆயிரத்து 441 பேரும் பதிவு செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.