சென்னை: தமிழ்நாட்டில் நேற்று மேலும் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 122 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  25,50,282 ஆக உயர்ந்துள்ளது அதுபோல சிகிச்சை பலனின்றி இதுவரை 33,937 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, தொற்றின் பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர்  மொத்த எண்ணிக்கை  24,93,583 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22,762 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தலைநகர் சென்னையில் 122 பேருடன் 3வது இடத்தில் உள்ளது.  சென்னையில் நேற்று   122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 53,72,49 ஆக அதிகரித்து உள்ளது. பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று வெறும் 2 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8312 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் நேற்று  172 பேர் குணமடைந்ததுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,74,35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 1502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

26.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 30,24,272 பேருக்கும், 26.07.2021 அன்று 21,876 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: