சென்னை:

யர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக, வெளி மாநிலத்தை 218 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகத்தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை, அண்ணாசாலையில் உள்ள  ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “நீட் பதிவு எண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் விண்ணப்பித் தால் தகுதி இழந்துவிடுவார்கள். பிற மாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன, மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் தமிழக கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், மருத்துவக் கல்வி இயக்ககம் கண்துடைப்புக்காக,  போலியான ஆவணங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்  தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல,  பல மாநில மாணவர்கள், போலியாக  தமிழக இருப்பிட சான்றிதழ் வாங்கி பல மாணவர்கள், தமிழக மாணவர்களின் இடங்களை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.