புதுச்கோட்டை: 2022ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம்  தச்சங்குறிச்சி வாடி வாசலில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க இளங்காளைகள் ஆவேசமாக ஆடி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு  ஜல்லிக்கட்டு போட்டி, கடுமையான கட்டுப்பாடு களுடன் நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்கியது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

அதையடுத்து போட்டி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இணையதள முன்பதிவு ஆனது கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது இதில் 4534 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்  புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம்  தச்சங்குறிச்சியில் இன்று காலை  தொடங்கி நடைபெற்று வருகிறது.  தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்கின்றன.

முன்னதாக, மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.