சென்னை: மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடந்த 8 மாத ஆட்சியின் சாதனை குறித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

“பதவி ஏற்றுக் கொண்ட முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன்” என்றும், ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம். 2.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

“பதவி ஏற்றுக் கொண்ட முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன்.நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம். 2.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது,

இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது”

கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொதுவெளியில் இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.  வாக்குறுதி அளித்தது மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம்”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பேச்சு வீடியோ