சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  25,33,323 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை   33,695 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில்,  இதுவரையில் 24,71,038 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 28,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,36,032 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8292 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 131 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,61,08 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் 1632 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்:

அரியலூர் 21
செங்கல்பட்டு 124
சென்னை 137
கோயம்புத்தூர் 241
கடலூர் 76
தர்மபுரி 30
திண்டுக்கல் 15
ஈரோடு 143
கள்ளக்குறிச்சி 58
காஞ்சிபுரம் 38
கன்னியாகுமரி 37
கரூர் 16
கிருஷ்ணகிரி 31
மதுரை 25
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 31
நமக்கல் 64
நீலகிரி 60
பெரம்பலூர் 12
புதுக்கோட்டை 32
ராமநாதபுரம் 18
ராணிப்பேட்டை 30
சேலம் 163
சிவகங்கை 34
தென்காசி 14
தஞ்சாவூர் 152
தேனி 19
திருப்பத்தூர் 21
திருவள்ளூர் 74
திருவண்ணாமலை 88
திருவாரூர் 33
தூத்துக்குடி 20
திருநெல்வேலி 14
திருப்பூர் 132
திருச்சி 79
வேலூர் 36
விழுப்புரம் 41
விருதுநகர் 24