சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும்  கடந்த 24 மணிநேரத்தில் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  25,33,323 பேர் ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில்  43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,695 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2,802 பேர் குணமடைந்துள்ளன் மூலம், இதுவரையில் 24,71,038 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரோனா வார்டில் 28,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,45,814 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,54,14,538 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.