சென்னை

ன்று கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 150 மாநகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று  சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ,

”தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே 17-ந் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களை இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 

எனவே, மேற்குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதால், அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் இன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்டிரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்குகிறது. 

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகளை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.