சென்னை

ன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கபட உள்ளன. 

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு  மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரொ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில ,

“தெற்கு ரயில்வேவில் கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோவில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு இடமளிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைக்குப் பதிலாக, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.  

வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட அட்டவணை மாற்றம் 17-03-2024-ந்தேதி மட்டுமே பொருந்தும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.