தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 607, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 83 மற்றும் காஞ்சிபுரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 89, தூத்துக்குடி 60, கன்னியாகுமரி 49, விருதுநகர் 26, திருநெல்வேலி 17, ராணிப்பேட்டை 16, மதுரை 15, சேலம் மற்றும் விழுப்புரத்தில் தலா 10 பேருக்கும்

திருச்சி மற்றும் திருவண்ணாமலையில் தலா 9 பேருக்கும், பெரம்பலூர் மற்றும் தென்காசியில் தலா 8 பேருக்கும்

வேலூரில் 7, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் தேனியில் தலா 6 பேருக்கும்

ஈரோடு மற்றும் நீலகிரியில் தலா 5 பேருக்கும்

நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர் மற்றும் திருப்பூரில் தலா 4 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2 பேருக்கும்

கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 24,775 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 759 ஆண்கள் 623 பெண்கள் என மொத்தம் 1,382 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

617 பேர் இன்று குணமடைந்த நிலையில் 6677 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.