தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 616, செங்கல்பட்டில் 266, திருவள்ளூரில் 71 மற்றும் காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 64, கன்னியாகுமரி 62, திருநெல்வேலி 29, மதுரை 26, தூத்துக்குடி 19, ராணிப்பேட்டை 16, திருச்சி 14, சேலம் 11, திருப்பூரில் 10 பேருக்கும்,

தேனி 9, கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் நீலகிரியில் தலா 8 பேருக்கும், கடலூர் மற்றும் சிவகங்கையில் தலா 7 பேருக்கும், விருதுநகர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 6 பேருக்கும்

பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் வேலூரில் தலா 5 பேருக்கும்

ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கும்

தருமபுரி, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தலா 3 பேருக்கும், கரூரில் 2 பேருக்கும்,

கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மொத்தம் 25,689 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 724 ஆண்கள் 635 பெண்கள் என மொத்தம் 1,359 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

621 பேர் இன்று குணமடைந்த நிலையில் 5912 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.