திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கன்னியாஸ்திரி 13முறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றம் நிரூபிக்க படாததால், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் கொச்சினில் உள்ள கன்னியாஸ்திரி லூசி என்பவர், அந்த மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் பிராங்கோ முல்லக்கல்  தன்னை  பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகார் அளித்தார். மனுவில்,  முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், 13 முறை கற்பழித்துள்ளார் என்றும் கூறினார்.

இதையடுத்து. கிறிஸ்தவ பாதிரியார் பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகே காவல்துறை வழக்கு பதிவு செய்து,  பிஷப் ஃபிராங்கோவை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று,  கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியிருக்கிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் குற்றவாளி என்று நிரூபணம் செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் பாதிரியார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதி கோபக்குமார் உத்தரவிட்டிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையினர் முறையாக செயல்படவில்லை என்றும், மாநில அரசும், கிறிஸ்தவத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது என்றும்,  காவல்துறை யினரும், எராளமான சாட்சிகளை இணைத்து, வழக்கை திசைதிருப்பி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தற்போது கற்பழிப்பு கார் கிறிஸ்தவ சாமியார் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.  மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, காவல்துறை மேல்முறையிடு செய்வதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில்,  தீர்ப்பு குறித்து பாதிரியார் பிராங்க்கோ இறைவனுக்கு நன்றி  தெரிவித்திருக்கிறார்.  அவர் மேலும்,  உண்மையாக உண்மை இறுதியாக வெல்லும் என்ற நம்பிக்கை பொய்யாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பிஷப் பிராங்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.   பாதிக்கப்பட்ட பெண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இந்த நீதிப்போராட்டத்தில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்றும் ரேகா ஷர்மா தெரிவித்திருக்கிறார்.

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூசி வெளியேற உத்தரவு: கிறிஸ்தவ திருச்சபை அடாவடி

பலாத்கார பேராயரை எதிர்த்த கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை