ராமேஸ்வரம்:
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.