சென்னை:
1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற செய்தி நேற்று வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும், பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.