சென்னை:
நீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,862 மையங்களில் இன்று  நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.