சென்னை

மிழகத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,55,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 14,864 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,66,55,256 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இதுவரை 34,54,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 63 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,17,022 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,52,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 31 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,43,256 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 53 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 8 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,30,069 பேர் பாதிக்கப்பட்டு 2,617 பேர் உயிர் இழந்து 3,27,423 பேர் குணம் அடைந்து தற்போது 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,36,074 பேர் பாதிக்கப்பட்டு 2,658 பேர் உயிர் இழந்து 2,33,155 பேர் குணம் அடைந்து தற்போது 261 பேர் சிகிச்சையில் உள்ளனர்.