தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 58, செங்கல்பட்டில் 53 திருவள்ளூரில் 12 மற்றும் காஞ்சிபுரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 8 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் தருமபுரி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மொத்தம் 14,843 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 88 ஆண்கள் 57 பெண்கள் என மொத்தம் 145 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

63 பேர் இன்று குணமடைந்த நிலையில் 711 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.