திருச்சி:
திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம் நேற்று இயற்கை எய்தினார்.

திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம். இவர் நேற்று உயிரிழந்தார். இவர் இறக்கும் முன்பு நான் மக்களை மகிழ்விக்க எந்த வேடம் அணிந்து நிகழ்வு செய்தேனோ அதை வேடத்தில் நான் இறந்த பின்பும் அதை போல் வேடம் அணிவித்து நான் இறுதி ஊர்வலத்திலும் கலைஞனாக செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக அன்னாரது இறுதிசடங்கில் அவர் விரும்பி ஏற்ற வேடத்துடன் மரியாதை செய்யப்பட்டது.