கோயம்புத்தூர்:

க்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கே ஜி மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவச்சலம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனக்கு ஏஜிபி அப்துல்கலாம் பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளார். நான் 46 ஆண்டாக இந்த டிரஸ்ட் மருத்துவமனை நடத்தி வருகிறேன். நான் டாக்டராக பணியாற்ற தொடங்கி 57 ஆண்டுகள் ஆகி விட்டது. 1964-ல் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்து விட்டு அமெரிக்க சென்று திரும்பி உள்ளேன். இந்த ஊரில் 46 ஆண்டுகளாக மருத்துவராக சேவையாறி வருகிறேன் என்று கூறியுள்ள அவர், மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.