சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி 4 நாட்கள் பயணமாக டில்லி  சென்றுள்ளார்.

இன்று காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசத் திட்டமிட்டு உள்ளார்.

மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டு உள்ளார்.  தற்போது தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் சில சட்ட நிபுணர்களையும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.