கோவை:  
கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கோவை மக்களுக்குக் குசும்பு மட்டும் இல்லை; சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள்; சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன், ஆனால், ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை; கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான்,  அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பேசினர் அந்த பொறுப்புகளுக்கு நான் ஆசைப்படாதவன் என்றார்.