சிதம்பரம்: 
தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த 3 பேரும் சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.