சென்னை:
னி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது. மேலும் நாளை மறுநாள் முதல் சென்னையில் இருக்கும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களிலும் இந்த திட்டம்  விரிவு படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.