சென்னை: 
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” என்ற தலைப்பில் இயக்கமாகச் செயல்படுத்தத்  தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” என்ற தலைப்பில் இயக்கமாகச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றும், பாரம்பரியமாகப் பயன்படுத்திய மஞ்சள் பைக்குத் திரும்பும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.