கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘முப்தி’ என்ற படத்தை இயக்குநர் கிருஷ்ணா தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் டைரக்டு செய்து வருகிறார்.

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ் நடித்து, வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான தேஜே அருணாசலம், ‘பத்து தல’ படத்தல் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார்.

“நான் சிலம்பரசன் சாரின் ரசிகன். அவரது அனைத்துப்படங்களையும் நான் பார்த்துள்ளேன். மன்மதன் படத்தில் அவர் நடிப்பு என்னை பரவசப்படுத்தியது சிலம்பரசன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தேஜே தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் வாதி என பன்முகத்தன்மை கொண்ட மனுஷ்யபுத்திரன், சமூக சேவகராக நடிக்கிறார்.

‘பத்து தல’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் – உதயமூர்த்தி.

“மேடையில் மனுஷ்யபுத்திரனை வேறு மாதிரி பார்த்துள்ளோம். ஆனால் இந்த படத்தில் அவரது வேடம் இன்னொரு கோணத்தில் இருக்கும்” என்கிறார், இயக்குநர் கிருஷ்ணா.

– பா. பாரதி