சென்னை:  ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதமிழில், ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் தேவி பாரதி ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார்.  பல நாவல்களையும் எழுதி  உள்ளார். இவர் எழுதிய  நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல், மற்றும் மானுட உணர்வின் பேராழத்தை விளக்கும்  ‘நீர் வழிப்படூஉம்’ உள்ளிட்ட பல  நாவல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இவரது நீர் வழிப்படூஉம்’  நாவல், இவருடைய மூன்றாம் நாவல். இதில்,  குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வுப்புலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைச் சித்தரிக்கிறது.  இந்த நாவலுக்குத்தான் தற்போது  சாகித்ய விருது கிடைத்திருக்கிறது’ .

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவி பாரதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் #தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் #SahityaAkademi விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! என குறப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல எழுத்தாளர்கள் அவருக்கு   வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.