சென்னை: 
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில்,  தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும்,  திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும்,  இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.