திருவள்ளூர்: 
கொசஸ்தலை ஆற்றிலிருந்து  1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து   பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பூண்டி அணை முழு கொள்ளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், பூண்டி சத்தியமூர்த்தி அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர் இன்று மதியம் 2 மணியளவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.