பலியான கமலாம்பாள்
பலியான கமலாம்பாள்

திருவண்ணாமலை:
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி  பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் , அமைச்சர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் பெண்களில் ஒருவர்
சிகிச்சை பெற்று வரும் பெண்களில் ஒருவர்

திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி  பச்சையம்மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இதற்கான ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தார்.   அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி,  6 பெண்கள் மயக்கமடைந்தனர்.  இவர்கள் அனைவரும்  திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மயக்கமடைந்தவர்களில்  60 வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.