டெல்லி: பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு  மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி.   ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். சிறுவயதிலேயே குஜராத்தின் தேநீர் கடைகளில் வேலை பார்த்தார். பிறகு பெரும் வளர்ச்சி அடைந்து ஒரு தலைவராக ஆனார். தான் வறுமையில் போராடிய குஜராத்துக்கே முதலமைச்சாராக வந்து 12 ஆண்டுகள் குஜராத்தை ஆட்சி செய்தார். தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக ஆட்சி செய்து வருகிறார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்தியுள்ளார்.