சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அசானி புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல்பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், திருவொற்றியூர், திருவெல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.